உன்னைப்பற்றிய நினைவுகள்
ஜன்னலோரம் தலைசாய்க்குமேயன்றி
மழையில் நனைய அனுமதிப்பதில்லை!
கண்கள் உதிர்க்கும் துளிகள்
மடி சேரும்
மழை சேருவதில்லை!
மழையாடும் நடனமும்
அதனுடனான ராகமும்
உன் பிரிதலின் நினைவூட்டல்!
உன் நினைவாய்
கண்கள் நிறைந்துகிடக்க
எங்கு போய் கலந்திடும்
மழை!
மழை நின்றும்
சன்னல் கம்பியின் அடியில்
தேங்கிடும் துளிகளாய்
உன் நினைவுகள்!
உன் நினைவுக்குளத்தில்
மூழ்கிகிடக்கிறேன்
மழையில் நனையாமலே!
என் பாதம் மட்டும்
நனைத்துக்கொள்கிறேன்
உன் தேகம் தொட்டுதான் கடந்திருக்கும்
இந்த மழையோடை!
மழை நனைத்த
குருவியின் இறக்கைபோல
நானும் உன் நினைவுகளும்!
உன் மடியின் கதகதப்பு
மழை நனைத்த
இந்த சுவருக்கு இல்லை!
எத்தனை கண்ணீர்துளிகளோ
இந்த மழையினுள்
கடலெல்லாம் உப்பு!
நீ தலை சாய்த்து நின்ற
பேருந்து நிலைய தூண்களெல்லாம்
இந்த மழையில் என்ன செய்யும்?
வாசல்வரை வந்துவிட்ட
மழையிடம் சொல்லிவிடவா
உன் முகவரி தெரியாதென்று!
உன் உச்சந்தலை
முத்தத்தை நினைவூட்டும்
இந்த மழையை என்ன செய்ய
நானும் சேர்ந்து அழுதுவிடவா?
தாழிடவும் இயலவில்லை
சன்னலுக்கும் கண்களுக்கும்
மழையால்!
மொட்டை மாடிக்கு
துணியெடுக்க ஓடுகையில்
கால்களுக்குள் குறுக்கிடும்
காதலை என்ன செய்திருப்பாள்!
எல்லா மழையிலும்
என்னை பருகத்துவங்கிவிடுகிறது
ஒரு தேநீர் கோப்பை!
கண் தட்டாமல்
பார்த்ததில் நேற்று நீ
இன்று மழை!
மழையில்
ஒரு ஆறுதலுண்டு
வெடித்து அழுதாலும்
வெளியில் கேட்டிடாது!
அழுவதற்கு
காரணம் வேண்டாம்
மழை போதும்!
ஜன்னலோரம் தலைசாய்க்குமேயன்றி
மழையில் நனைய அனுமதிப்பதில்லை!
கண்கள் உதிர்க்கும் துளிகள்
மடி சேரும்
மழை சேருவதில்லை!
மழையாடும் நடனமும்
அதனுடனான ராகமும்
உன் பிரிதலின் நினைவூட்டல்!
உன் நினைவாய்
கண்கள் நிறைந்துகிடக்க
எங்கு போய் கலந்திடும்
மழை!
மழை நின்றும்
சன்னல் கம்பியின் அடியில்
தேங்கிடும் துளிகளாய்
உன் நினைவுகள்!
உன் நினைவுக்குளத்தில்
மூழ்கிகிடக்கிறேன்
மழையில் நனையாமலே!
என் பாதம் மட்டும்
நனைத்துக்கொள்கிறேன்
உன் தேகம் தொட்டுதான் கடந்திருக்கும்
இந்த மழையோடை!
மழை நனைத்த
குருவியின் இறக்கைபோல
நானும் உன் நினைவுகளும்!
உன் மடியின் கதகதப்பு
மழை நனைத்த
இந்த சுவருக்கு இல்லை!
எத்தனை கண்ணீர்துளிகளோ
இந்த மழையினுள்
கடலெல்லாம் உப்பு!
நீ தலை சாய்த்து நின்ற
பேருந்து நிலைய தூண்களெல்லாம்
இந்த மழையில் என்ன செய்யும்?
வாசல்வரை வந்துவிட்ட
மழையிடம் சொல்லிவிடவா
உன் முகவரி தெரியாதென்று!
உன் உச்சந்தலை
முத்தத்தை நினைவூட்டும்
இந்த மழையை என்ன செய்ய
நானும் சேர்ந்து அழுதுவிடவா?
தாழிடவும் இயலவில்லை
சன்னலுக்கும் கண்களுக்கும்
மழையால்!
மொட்டை மாடிக்கு
துணியெடுக்க ஓடுகையில்
கால்களுக்குள் குறுக்கிடும்
காதலை என்ன செய்திருப்பாள்!
எல்லா மழையிலும்
என்னை பருகத்துவங்கிவிடுகிறது
ஒரு தேநீர் கோப்பை!
கண் தட்டாமல்
பார்த்ததில் நேற்று நீ
இன்று மழை!
மழையில்
ஒரு ஆறுதலுண்டு
வெடித்து அழுதாலும்
வெளியில் கேட்டிடாது!
அழுவதற்கு
காரணம் வேண்டாம்
மழை போதும்!
0 comments
Post a Comment