Pin It

Widgets

கண்ணாமூச்சி

Saturday, September 01, 2012 | 0 comments »

இருக்கையிலிருந்தபடி
தனக்குப்பின்னதான படிக்கட்டில்
கையூன்றி புத்தகம் வாசிக்கிறாள் சஹானா

கதவு திறந்திடும் சத்தமோ
அழைப்புமணியின் ஓசையோ
எதிர் பார்த்த நிமிடங்களில் நிகழவில்லை

காத்திருப்பின் நிமிடங்களில் தொலையும்
பொறுமையினை மீட்டெடுக்க
அங்குமிங்குமாய் நடக்கத்துவங்கினாள்

சன்னோலரம் தோள் சாய்த்து
காற்றில் படபடக்கும்
காகிதத்தின் ஓசை கேட்கத்துவங்கினாள்

மார்பழுந்த கையூன்றி
படுக்கையில் விழுந்தவளின்
கண்களில் எழுத்துகள் விழவில்லை

ஒரு மிடறு தேநீருக்காக துடிக்கும்
அவள் உதடுகளை சமையலறைக்கு
புத்தம் வாசித்தபடியே கூட்டிச்செல்கிறாள்

சர்க்கரை தேடி கைகள் மேலேர
இடையாடும் கூந்தல் முதுகிலேர
பெருவிரலூன்றி முன்னேற

கதவிற்குப்பின் காத்திருந்த கால்களிரண்டும்
அவளின் மேலேறிய பாதத்தின்
இடைவெளியில் நுழைய

சினுங்கல்கள் முனகலாக
விரித்து வைத்திருந்த புத்தகம்
திரும்பிப் படுத்துக் கொண்டது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets