Pin It

Widgets

இவ்விரவில் எந்தவொரு
இசைக்கும் செவிமடுக்கவில்லை
என் காதுகள்

மெளனத்தின் மனவொலி
பிடிக்கவில்லை என்கிறது
என் கண்கள்

நடந்து பார்க்கிறேன்
விட்டம் பார்கிறேன்
வானம் பார்கிறேன்

காகிதத்தில் கிறுக்கல்களில்லை
கற்பனை கவிதையாகவில்லை
கண்களில் காட்சியேதுமில்லை

என்னவென சொல்லிவிட முடியாத
இந்த வெறுமையை
என்னவென எழுதிவைக்க?

சண்டையிட்டு உறங்கும்
அவளின் உள்ளங்காலில்
விரல்களால் கோடுகிழிக்கலாம்

பாதி தூக்கத்தில் அவளின்
முனகல் ரசித்தபடியே
விடியும் வரை காத்திருக்கலாம்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets