இவ்விரவில் எந்தவொரு
இசைக்கும் செவிமடுக்கவில்லை
என் காதுகள்
மெளனத்தின் மனவொலி
பிடிக்கவில்லை என்கிறது
என் கண்கள்
நடந்து பார்க்கிறேன்
விட்டம் பார்கிறேன்
வானம் பார்கிறேன்
காகிதத்தில் கிறுக்கல்களில்லை
கற்பனை கவிதையாகவில்லை
கண்களில் காட்சியேதுமில்லை
என்னவென சொல்லிவிட முடியாத
இந்த வெறுமையை
என்னவென எழுதிவைக்க?
சண்டையிட்டு உறங்கும்
அவளின் உள்ளங்காலில்
விரல்களால் கோடுகிழிக்கலாம்
பாதி தூக்கத்தில் அவளின்
முனகல் ரசித்தபடியே
விடியும் வரை காத்திருக்கலாம்!
இசைக்கும் செவிமடுக்கவில்லை
என் காதுகள்
மெளனத்தின் மனவொலி
பிடிக்கவில்லை என்கிறது
என் கண்கள்
நடந்து பார்க்கிறேன்
விட்டம் பார்கிறேன்
வானம் பார்கிறேன்
காகிதத்தில் கிறுக்கல்களில்லை
கற்பனை கவிதையாகவில்லை
கண்களில் காட்சியேதுமில்லை
என்னவென சொல்லிவிட முடியாத
இந்த வெறுமையை
என்னவென எழுதிவைக்க?
சண்டையிட்டு உறங்கும்
அவளின் உள்ளங்காலில்
விரல்களால் கோடுகிழிக்கலாம்
பாதி தூக்கத்தில் அவளின்
முனகல் ரசித்தபடியே
விடியும் வரை காத்திருக்கலாம்!
0 comments
Post a Comment