Pin It

Widgets

நீளக்கூந்தல் முதுகிலாட
வெள்ளைப்பூக்கள் நிரம்பிய
கருமேக பாவாடையுடுத்தி

பால்நிலா சட்டையணிந்து
அதில் கொஞ்சம் அழகேற்றி
என்னை மெல்ல நெருங்குகிறாள்

பெருவிரல் தரையூன்றி
மேலே மேலே எத்தனிக்கிறாள்
பறிக்கமுடியாது தத்தளிக்கிறாள்

நான் மட்டும் கேட்டிடும் அளவிற்கு
கொலுசொலி இசைத்து
துள்ளிப்பறித்திட ஆவல் கூட்டுகிறாள்

நிறம் மாறிவிட்ட பாதம் கண்டு
முகம் சுழிக்கிறாள்
முட்கள் பதித்ததற்காய் கண் நிறைகிறாள்

தேவதையுனக்கு பூவொன்றினை
உதிர்க்கமுடியாது போன எனக்கு
ரோஜா செடியென்ற பெயரெதற்கு?

கூந்தலேற முடியா பூவினை
தினம் தினம் பூத்தெதற்கு-உன்
பாதம் தாங்கும் புற்களாயிருக்கலாம்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets