நீளக்கூந்தல் முதுகிலாட
வெள்ளைப்பூக்கள் நிரம்பிய
கருமேக பாவாடையுடுத்தி
பால்நிலா சட்டையணிந்து
அதில் கொஞ்சம் அழகேற்றி
என்னை மெல்ல நெருங்குகிறாள்
பெருவிரல் தரையூன்றி
மேலே மேலே எத்தனிக்கிறாள்
பறிக்கமுடியாது தத்தளிக்கிறாள்
நான் மட்டும் கேட்டிடும் அளவிற்கு
கொலுசொலி இசைத்து
துள்ளிப்பறித்திட ஆவல் கூட்டுகிறாள்
நிறம் மாறிவிட்ட பாதம் கண்டு
முகம் சுழிக்கிறாள்
முட்கள் பதித்ததற்காய் கண் நிறைகிறாள்
தேவதையுனக்கு பூவொன்றினை
உதிர்க்கமுடியாது போன எனக்கு
ரோஜா செடியென்ற பெயரெதற்கு?
கூந்தலேற முடியா பூவினை
தினம் தினம் பூத்தெதற்கு-உன்
பாதம் தாங்கும் புற்களாயிருக்கலாம்!
வெள்ளைப்பூக்கள் நிரம்பிய
கருமேக பாவாடையுடுத்தி
பால்நிலா சட்டையணிந்து
அதில் கொஞ்சம் அழகேற்றி
என்னை மெல்ல நெருங்குகிறாள்
பெருவிரல் தரையூன்றி
மேலே மேலே எத்தனிக்கிறாள்
பறிக்கமுடியாது தத்தளிக்கிறாள்
நான் மட்டும் கேட்டிடும் அளவிற்கு
கொலுசொலி இசைத்து
துள்ளிப்பறித்திட ஆவல் கூட்டுகிறாள்
நிறம் மாறிவிட்ட பாதம் கண்டு
முகம் சுழிக்கிறாள்
முட்கள் பதித்ததற்காய் கண் நிறைகிறாள்
தேவதையுனக்கு பூவொன்றினை
உதிர்க்கமுடியாது போன எனக்கு
ரோஜா செடியென்ற பெயரெதற்கு?
கூந்தலேற முடியா பூவினை
தினம் தினம் பூத்தெதற்கு-உன்
பாதம் தாங்கும் புற்களாயிருக்கலாம்!
0 comments
Post a Comment