Pin It

Widgets

உடன்பாடுகளற்று 
உயிர் கூசும் நடுநிசியில்
நெஞ்சின் ரொமங்கள் பிராண்டுகிறாய்

மொழி பெயர்க்க முடியா
உள்ளுணர்வுகளை வேற்றுமொழியில்
கசியவிட்டு கரைசேருகிறாய்

கோபம் களைவதற்கும் கோபம்
கொள்வதற்கும் காரணங்கள்
கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன

இருந்தும்

வழி தப்பிய ஆடு போல
முணுமுணுக்கும் வேலையிலெல்லாம்
சேருமிடம் சேர்க்க இயலாதிருக்க

நீ உயிர்த்தெழுவதாய் சொல்லிக்கொள்ளும்
அதிகாலை புணர்ச்சி கனவினால்-என்
இயலாமையின் குறிப்பெழுதுகிறாய்...

அது
முடிச்சுகள் அவிழ்ப்பது பற்றியும்
முடிச்சுகளிடுவது பற்றியுமிருக்கிறது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets