Pin It

Widgets

எழுதித்தீர்ந்த பேனாவின் முனைகொண்டு
குருதி வழிய துளையிட்டிருக்கிறாள்
உள்ளங்கையின் பள்ளத்தில்

சூடேற்றிய ஸ்பூனின்
கைப்பிடி பாகம் கொண்டு
சூடிட்டிருக்கிறாள் தொடையில்

ஈரம் நிறைந்த பூந்தொட்டியினை
கால்பெருவிரல் சிதைத்து
ரோஜாமுட்களால் கிழித்திருக்கிறாள் நாவில்

கரடி பொம்மை பியித்தெறிந்து
கட்டில் கம்பி கடித்திருக்கிறாள்
கண்ணாடியுடைத்து முத்தமிட்டிருக்கிறாள்

எத்தனைமுறை முத்தமிட்டிருப்பாள்?
தெரியாது...
குழந்தையில் எச்சில் ஒழுகலைப்போல

பசையோடு வடிந்து கொண்டிருந்தது
கழுத்தினை இறுக்குவதற்கு
அவள் பயன்படுத்திட்ட கயிறு...

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets