Pin It

Widgets

நா குட்டி

Monday, April 29, 2013 | 0 comments »

அவளுக்கு தன் மகனை
இப்படித்தான் அழைக்க பிடிக்கும்
நா குட்டி...

புத்திக்கு தெரியும்
நிலையின் குறுக்கே பலகையிட்டு
ஆணியடித்திருக்கிறதென்று

அடுக்களையில் இருக்கையில்
அதிகமாய் பதறுவாள்

பாதி தூக்கத்திலேயே
அழைக்கத்துவங்கிவிடுவாள்

நா குட்டி
என்ன பண்ணிட்டு இருக்க?

எப்போதும்போல ஒலிக்கத்துவங்கிவிடும்
முன்னமே பதிவு செய்திருந்த குரல்

வெளாண்டுட்டு இருக்கேன்மா...

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets