Pin It

Widgets

அளவாய் தூண்டிய
சிம்மிணி விளக்கில்
கழுத்தில் ஒளிர்வது 
வெளியில் பொழியும்
மழைத்துளியா?
வியர்வை மழையா?

கூந்தல் சிக்கெடுக்க
கொங்கை மறைத்து
உன் விரல்படர
உதடு மட்டும்
பாலைவனம்!

தொப்பலாய் நனைந்து
உதரும் பாவாடையில்
உதிரும் நீர் முத்துகள்
நடனமாடுகிறது-உன்
கொலுசொலி கேட்டு!

கார்முகில்கள் உடைந்து
விழும் மழையில்-நீ
கார்கூந்தல் கலைத்து
ஆடும் விரல்கள்
காமத்தின் படிக்கட்டுகள்

உன் ஈர உடைகள்
கொடியேற-என்
தேக நரம்புகள்
மேலேற வேண்டுகிறது
ஒரு மழைக்காலம்

நீ மாராப்பு கட்டி
கடக்கையில் எழும்
அக்குள் வாசனையில்
தொடுத்த மல்லிப்பூக்கள்
உதிரிகளாகிறது
கட்டிலில்!

எதிரெதிரே மழை
தெளித்து விளையாடும்
இடைவெளி குறைந்து
மீசை முடிகளின் ஈரம்
துவட்டுகிறாய்
மூச்சுக்காற்றில்

தலை காயும்வரை
தலையணை பொறுக்காது
என்றால்
மடிதாங்கு என்கிறாள்
வியர்வை வழிகிறது
இடையில்

நீரில் பதித்த
பாதச்சுவடுகள்
காயும்வரை
பொறுக்கவில்லை
தரையும் தழுவலும்!

நெற்றிபரப்பில் ததும்பும்
முத்த அலைகளில்
காமத்தின் முத்தம்
கணக்கிலடங்காமலும்
காதலின் முத்தம்
மூன்றாகவும்...

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets