Pin It

Widgets

கா த ல்

Monday, April 29, 2013 | 0 comments »

நீ செல்லமாய்
குட்டுவதும் அடிப்பதும்
ஒரு அணைப்பிற்கின்றி
வேறெதுவாய் இருக்க முடியும்?

முற்றமென நினைத்தாயோ?
வியர்வை தெளித்து
மீசையால் கோலமிடுகிறாய்
என் தேகத்தில்!

நீ கேட்கும்
"என்ன பண்ற" என்பது
உனக்கு கேள்வியாகவும்
எனக்கு கட்டளையாகவும்
உன்னோடு
பேசத்துவங்கிவிடுகிறேன்!

உன்
பிடிவாதத்தின்
பின்னணியில்
ஓராயிரம் கொஞ்சல்கள்!

மீசை குத்துகிறது
என்பதிலிருந்து
மீசை கூசுகிறதென
முன்னேறியிருக்கிறாய்
நீ!

போகாதே என்பதன்
அருஞ்சொற்பொருள்
நீ சொல்லும்
ச்சீ போடா...

முத்தமென வினவவும்
சுற்றுமுற்றும் சுழலும்
உந்தன் விழிகளிலே
நான் காண்கிறேன்
தேரோட்டம்!

நிழலொதுங்கும் சாலையில்
வியர்கிறது...
நம் கை கோர்த்தலில்
காதலுக்கு!

நீ எனக்காகவும்
நான் உனக்காகவும்
காத்திருந்து ஒருசேர
அழைக்கையில்
நமை விடுத்து
பேசிக்கொண்டிருக்கிறது
காதல்!

உனக்கே உனக்கென
வாங்கிக்கொள்வதில்
முதலாவதாய் முத்தமும்
மொத்தமாய் கவிதைகளும்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets