Pin It

Widgets

சூரியனற்ற வானம்
பொழியும் இருளில்
வெக்கை முளைக்க

கண்ணீர்
பிசுபிசுப்புகளில்
கதவடைத்துக்கிடக்கிறது

உலர்ந்த உதடுகளும்
வறண்ட தொண்டையும்
நனைந்த விழிகளும்

அவரவர் தேசத்தில்
அவரவர் நேசத்தில்
நனைந்து கொண்டிருக்க

நிலவின் தூரல்கள்
சிலருக்கு கண்ணீராய்
சிலருக்கு கவிதையாய்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets