Pin It

Widgets

............

Monday, April 29, 2013 | 0 comments »

தூக்கம் கலைந்த பின்னிரவில்
கேட்கும் அழுகை சத்தமானது
குழந்தையுடையதென நினைத்திருந்தேன்

பழைய சீலைமறைவு குளியலரையும்
கதவில்லா சன்னலும் ஒரு மின் விளக்கும்
தாழிடாத வாசலும் கொண்ட வீட்டில்

ஈரமாகாத சீசன் டவலும்
சின்ன சின்னதாய் வெட்டப்பட்ட
ரேசன் கடை வேட்டியும் காயும் மதிலில்

கடந்தவாரம் தென்னைமூட்டில்
புதைக்கப்பட்ட குழந்தையைப் போலவே
அழுது கொண்டிருக்கிறது ஒரு பூனை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets