Pin It

Widgets

பழுப்பிலைகள் மட்டுமே
உதிரும் அந்த மரத்திலிருந்து
கிளையொன்று முறிந்திருக்கிறது

மூத்திரவாடைகள் நிறைந்த
மரத்துமூட்டில் கூடும் கால்கள்
உமிழ்வதும் புகைப்பதும்

எவனோ ஒருவனை பழிதீர்க்க
பேசுவதும் எவளோ ஒருத்தி
காதலிக்கப்படுவதும்

இன்னபிற உரையாடல்களும்
வசவு வார்த்தைகளும்
புதிதில்லை அம்மரத்திற்கு

இருந்தும் கிளைமுறிந்த அன்று
தன் கூட்டை சுற்றி சுற்றி வந்த
பறவையன்றி வேறெவருமில்லை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets