Pin It

Widgets

விழிமூடி துயிலக்காத்திருக்கும்
வேளையில் மனக்கண்ணில்
உருண்டோடும் காட்சிகள்,

முறிந்த கள்ளிப்பால்
தெரித்து கண்ணில்விழுவதுபோல
அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன

நிலம் நினைத்து நிலம் நிறுத்தி
தூங்கத்துணிய அங்குமிங்குமாய்
அலைந்து கொண்டிருக்கிறது மனது

திசைகளெங்கும் கதவடைக்க
கிளைபரப்பிய சல்லிவேர்கள்
நிலம் கிழித்து ஆணிவேரூன்ற

நினைவுகளின் சட்டத்தில்
தூக்குக் கயிற்றின் வடிவமொத்த
இரு விழிகள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets