Pin It

Widgets


அங்குமிங்குமாய் புத்தகம்
அடுக்கி வைக்கப்பட்ட மேடையில்
சிதறிக்கிடக்கும் சில்லறைகளை

கையிலள்ளி மேலும் கீழுமாய்
குலுக்குகையில் எழும் ஓசை
அவ்வளவு ஆறுதலாயிருக்கிறது

உதட்டளவு மெனளத்திற்கும்
மனதின் பேரிறைச்சலுக்கும்
இந்த கோடை இரவில்,

நடுநிசியில் பசித்து அழும்
தாயில்லா குழந்தையின் மனதோடு
ஒத்திசைப்பதுபோலவேயிருக்கிறது

நீ
உடைந்து அழுததை நினைத்து
வேறென்ன செய்துவிட முடியும்?

சில்லறைகளை துளிகளாக்கி
விழிகளில் வழியவிடுவதே
ஆறுதலாயிருக்கிறது எனக்கும்!
 

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets