Pin It

Widgets

உன்னை சுமக்கும் அளவிற்கான
வலுவில்லை என்னிடமும்-உன்
மெளனத்தில் தவிக்கும் இதயத்திடமும்

பின்னிரவுகளில் நீ அழைக்கும்
என் பெயரின் ஓசை
இசைத்துக்கொண்டேயிருக்கிறது

கொஞ்சம் அதிகமாகவே
பலகீனமாக்கியிருக்கிறாய் என்னை
வெளியேறுவதற்கான முன்னெடுப்புகளில்

முன்னெப்பொழுதோ உன் அழுகையை
பூந்தொட்டியில் பதியம் வைக்க அவைகள்
சிரித்துக்கொண்டிருப்பதாக சொல்லியிருந்தேன்

இன்று உன் மெளனம் கீறும் சூட்டில்
பொழிந்த அன்பின் விளைச்சலில்
என் கண்ணீரின் வாசமடிக்கிறது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets