என் வானம்
இருண்டுகொண்டே வருகிறது
இந்த மதிய வேளையிலும்
உன் மடியில் கிடத்தி
விழிமூடிய இமையை
பிரிப்பதற்காக முனைகிறாய்
முதலில் கொஞ்சுகிறாய்
அடுத்து கெஞ்சுகிறாய்
பின்னர் கதறி அழுகிறாய்
அசைவுகளற்று கிடப்பதறிந்து
மார்பில் முகம் புதைத்து
ஈரம் சொட்ட அழுகிறாய்
விபத்துப்பகுதியென
அறிவிக்கப்பட்டிருந்தும்
உன்னை அந்த சிக்னலில்
முதன் முதலாய் கண்டு
கடக்காமலிருந்தது
என் தவறு தான்...
என்ன செய்ய?
இப்படியெல்லாம்
கற்பனை செய்து பார்க்கிறது
நீ ஏற்கமறுத்த என் காதல்!
இருண்டுகொண்டே வருகிறது
இந்த மதிய வேளையிலும்
உன் மடியில் கிடத்தி
விழிமூடிய இமையை
பிரிப்பதற்காக முனைகிறாய்
முதலில் கொஞ்சுகிறாய்
அடுத்து கெஞ்சுகிறாய்
பின்னர் கதறி அழுகிறாய்
அசைவுகளற்று கிடப்பதறிந்து
மார்பில் முகம் புதைத்து
ஈரம் சொட்ட அழுகிறாய்
விபத்துப்பகுதியென
அறிவிக்கப்பட்டிருந்தும்
உன்னை அந்த சிக்னலில்
முதன் முதலாய் கண்டு
கடக்காமலிருந்தது
என் தவறு தான்...
என்ன செய்ய?
இப்படியெல்லாம்
கற்பனை செய்து பார்க்கிறது
நீ ஏற்கமறுத்த என் காதல்!
0 comments
Post a Comment