Pin It

Widgets

என் வானம்
இருண்டுகொண்டே வருகிறது
இந்த மதிய வேளையிலும்

உன் மடியில் கிடத்தி
விழிமூடிய இமையை
பிரிப்பதற்காக முனைகிறாய்

முதலில் கொஞ்சுகிறாய்
அடுத்து கெஞ்சுகிறாய்
பின்னர் கதறி அழுகிறாய்

அசைவுகளற்று கிடப்பதறிந்து
மார்பில் முகம் புதைத்து
ஈரம் சொட்ட அழுகிறாய்

விபத்துப்பகுதியென
அறிவிக்கப்பட்டிருந்தும்
உன்னை அந்த சிக்னலில்

முதன் முதலாய் கண்டு
கடக்காமலிருந்தது
என் தவறு தான்...

என்ன செய்ய?
இப்படியெல்லாம்
கற்பனை செய்து பார்க்கிறது

நீ ஏற்கமறுத்த என் காதல்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets