வெயில் பொழியும் சூட்டிற்கு
நிகராயிருக்கிறது-உன்
புன்னகை நிரம்பிய சொற்கள்
எழுதுவதற்கு வாய்ப்பளிக்காது
விரல்களுக்குள்
நான் கோதிய மயிரிழைகளும்
விரல்வடிவ இரத்தக்கோடுகளும்
சன்னல் கம்பிகள் நிழல்விழும்
அறை கதவின் பின்
உதடில்லா முகம் வரைந்து
நீ பேசாதவாறு என் உதட்டின்
தசையறுத்து முத்தமிட்டிருக்கிறேன்
விலா எலும்புகளின் இடுக்குகளில்
பாய்ந்து கொண்டிருக்கிறது
புன்னகை நிரம்பிய உன் சொற்கள்!
நிகராயிருக்கிறது-உன்
புன்னகை நிரம்பிய சொற்கள்
எழுதுவதற்கு வாய்ப்பளிக்காது
விரல்களுக்குள்
நான் கோதிய மயிரிழைகளும்
விரல்வடிவ இரத்தக்கோடுகளும்
சன்னல் கம்பிகள் நிழல்விழும்
அறை கதவின் பின்
உதடில்லா முகம் வரைந்து
நீ பேசாதவாறு என் உதட்டின்
தசையறுத்து முத்தமிட்டிருக்கிறேன்
விலா எலும்புகளின் இடுக்குகளில்
பாய்ந்து கொண்டிருக்கிறது
புன்னகை நிரம்பிய உன் சொற்கள்!
0 comments
Post a Comment