Pin It

Widgets

சாட்சி

Monday, March 11, 2013 | 0 comments »

உறங்க மறுக்கும் விழிகளை
சதா திட்டிக்கொண்டேயிருக்கிறேன்
நான் நானற்று வாழும் வேளையில்

இரவுகளில் தெருவில் கீரை விற்கும்
கிழவி ஒருத்தியின் குரலில்
உன் பெயர் கேட்டுக்கொண்டேயிருக்கிறது

இடமும் வலமுமாய் படுக்கையில்
தலையுருட்டி விழித்துப் பார்க்கிறேன்
நீண்ட கூந்தல் படுக்கையில் கிடக்கிறது

எதும் பெண்ணை அழைத்து வந்ததாகவோ
புணர்ந்ததாகவோ கொலை செய்ததாகவோ
நாட்காட்டியில் குறிப்பில்லை...

நினைவிலும் இல்லை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets