Pin It

Widgets


பாதம் அடிபட்ட குழந்தையின்
முகபாவனையையும் கை செய்கையையும்
ஒத்திருக்கிறது சண்டைக்குப்பின் உன் முகம்

கோபத்தில் கடித்துக்கசியும் குருதியில்
உதட்டின் உட்தசை நிறமிழந்து
வன்மமாய் உருவேறுகிறது காதல்

மணல் வெடிப்புகளில் வேகமாய்
பாயும் நீரினைப்போல பிடிவாதங்களால்
நரம்புகளில் நிரம்புகிறாய்

தழுவுதலில் பெற்றிடும்
முத்தத்தத்தின் விளக்கவுரைகள்
உன் மூடிய விழிகளுக்குள் இருக்க

வாதையினால் உலர்திராட்சை உண்ணும்
ஓய்வு நாளின் பின்மதியபொழுதில்
வாசிக்கத்துவங்குகிறேன்-நீ

தூங்குவதுபோல தூங்குகிறாய்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets