Pin It

Widgets

அந்தக்கடற்கரையில் அவளுக்கு
நண்டு ஒன்று அங்குமிங்குமாய்
ஓடுவது தான் படித்திருந்தது.

நிலவின் சிவப்பு மஞ்சளானதும்
கடலினை மறந்து அலையை,
நண்டை ரசித்துக்கொண்டிருந்தாள்

கடலில் படரும் நிலவின்
வெளிச்ச விரிவினை காணக்காண
தனை மறந்து கொண்டிருந்தாள்

ததும்ப ததும்ப எழும் நுரையில்
நண்டின் கொடுக்கினை அதனழகை
தொட்டுப்பார்க்க வேண்டுமென்றாள்

என் பார்வை என்னவென அறிய
நான் அவளை பார்க்கும்வேளையில்
அவள் என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்

ஒட்டியிருந்த மணல் மெதுவாய்
உதிரத்துவங்கியது...

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets