ஒவ்வொருமுறை பேனா காகிதம்
தொடும் போதெல்லாம்
புள்ளியாய் நின்றுவிடுகிறாள்
எழுத்துக்கும் எனக்கும் ஊடேயான
காலத்தின் இடைவெளியில்
நழுவிடாது நங்கூரமிட்டிருக்கிறாள்
அறுபட்ட கோழியின் துடிதுடிப்பாய்
உருவமில்லா உணர்வுகள்
மேலெழுந்து மேலெழுந்து அடங்கிவிட
சடலத்திற்கு நிகழும் மயிரெடுப்பு போல
உணர்வற்று கிடத்தியிருக்கிறாள்
நினைவுகளின் தரையில்...
தொடும் போதெல்லாம்
புள்ளியாய் நின்றுவிடுகிறாள்
எழுத்துக்கும் எனக்கும் ஊடேயான
காலத்தின் இடைவெளியில்
நழுவிடாது நங்கூரமிட்டிருக்கிறாள்
அறுபட்ட கோழியின் துடிதுடிப்பாய்
உருவமில்லா உணர்வுகள்
மேலெழுந்து மேலெழுந்து அடங்கிவிட
சடலத்திற்கு நிகழும் மயிரெடுப்பு போல
உணர்வற்று கிடத்தியிருக்கிறாள்
நினைவுகளின் தரையில்...
0 comments
Post a Comment