Pin It

Widgets

ஒவ்வொருமுறை பேனா காகிதம்
தொடும் போதெல்லாம்
புள்ளியாய் நின்றுவிடுகிறாள்

எழுத்துக்கும் எனக்கும் ஊடேயான
காலத்தின் இடைவெளியில்
நழுவிடாது நங்கூரமிட்டிருக்கிறாள்

அறுபட்ட கோழியின் துடிதுடிப்பாய்
உருவமில்லா உணர்வுகள்
மேலெழுந்து மேலெழுந்து அடங்கிவிட

சடலத்திற்கு நிகழும் மயிரெடுப்பு போல
உணர்வற்று கிடத்தியிருக்கிறாள்
நினைவுகளின் தரையில்...

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets