Pin It

Widgets


அமைதி கொள்வதற்கென
ஓயாது இசைத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னுடனான நம் உரையாடல்களை

அனுமதி மறுக்கப்பட்டு திரும்பும்
எதிர் பதிலற்ற
உன்னைப்பற்றிய நினைவுகளை

மூர்க்கமாய் அறுத்தெரிகிறேன்
தரையெங்கும் பரவிக்கிடக்கும்
உன்னோடு படர்ந்த புல்வெளிகளை

இறுதியாக
பறவைகளின் ஒலி தவிர்க்க
மரம் ஒன்றினையும் வெட்டியாகிவிட்டது

இனி
அம்மரத்தினாலான சட்டத்தில்
தூக்கில் தொங்குவது மட்டும் தான் பாக்கி!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets