Pin It

Widgets

தூங்கிவிட்டதாய் தொடங்கும்
தலைவருடலும் அதற்கு
தோதுவாய் புரண்டு படுப்பதும்

பழக்கப்பட்டுவிட்டது
நீல நிற விளக்கிற்கும்
சன்னல் காற்றிற்கும்

மெளனங்கள் அரசாலும்
அவ்விரவுகளில் தூங்காது
கனாக்கானும் நீயும் நானும்

எப்போது தூங்கிப்போவது
என அறியாது நீளும்
இருவருக்குமான கதகதப்பில்

உனையறியாது பிறையென
மிளிரும் உன் கண்களை
நான் காணும் வேளையில்

நிலவுக்கு சமிக்ஞை செய்து
தலைதிருப்பி
வெளியேறுகிறது பல்லி ஒன்று!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets