Pin It

Widgets


வழித்தடங்கள் இல்லா பாதையில்
பயணித்துக் கொண்டிருக்கிறது
கருவிழிகளற்ற விழிகள்

நிரம்பி வழியும் அவளின்
விழிக் கோப்பையின் அடியில்
ஆதாம் உண்ட ஏவாளின் சாபம்

மோப்ப நாய்கள் நிறைந்த வனத்தில்
அடையாளமின்றி செல்லவியலாதது
பெரும் துயரம்...

ஆளரவமற்ற சந்தையில்
கழுகுகளின் பசியாற
உயிர்பிரித்து பரிமாற்ற

ஈடுகொடுக்கவியாலாத வேகத்தில்
ஓட்டமெடுப்பவள் தன்னையறியாது வீதியில்
விட்டுச்செல்கிறாள் யோனிக் குருதியை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets