Pin It

Widgets

சக்கரத்தடங்கள்
பதியாத அந்தச்சாலையில்
குழந்தையின் கைத்தடங்கள்!

கிளைகள் ஒடித்து
விழும் நிலா நிழலில்
ஒரு வாய் சோறு

அணில் குட்டிகள்
துளையிட்ட பால் புட்டியோடு
கண்ணீர்த்துளிகள்

இரண்டு மரங்களை
இணைக்கும் கயிற்றில்
துணி மாட்டிகளும் குருவிகளும்

மரங்களுக்குப்பின்
ஒளிந்து கொள்ள
தேடுவதுபோல் அம்மா!

தென்னங்கீற்று மடலிசையோடு
குயிலின் ராகமும்
குழந்தையின் அழுகையும்

இலைகள் சருகாகும்
கூடு முட்களாகும்
குயில்கள் வானமாகும்

சட்டங்களற்ற வீட்டின்
தொட்டில்
மரக்கிளையில்!

கைத்தடிகளும்
வேப்பம்பூக்களும்
சிரிப்பு சத்தமும்!

இலையுதிர்கால மரத்து நிழலை
வரைந்து பழகுகிறது
தார்ச்சாலை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets