Pin It

Widgets

அவள்

Monday, March 11, 2013 | 0 comments »

அவள்
என்னோடு இருக்கும்
காலத்தினை
தீர்மாணிப்பது
மணிக்கொருமுறை
எடுக்கும் சொடுக்குகள்

அவள்
புளியங்காய் குதப்பும்
அழகில் குவியும் உதடுகள்
கண்டு பூ மொட்டுகளுக்கு
பொறாமை!

பப்பாளி குழலில்
நீ வாசிப்பது
புல்லாங்குழலா
பூவிதழ் காம்பா?

அவள் வீட்டு மாடிக்கும்
என் வீட்டு மாடிக்கும்
இடையே காகம் கரைவது
காணாது உறங்குவதில்லை
விழிகள்!

கோயில் சிலைகளில்
குங்குமம் தட்டிவைக்கும்
பழக்கம் நின்றது
நீ என் கைப்பிடித்து
நேற்றியில் வைக்கசொன்னதிலிருந்து

தாவணியில் நூலுருவி
தாலியுருட்டிக்கேட்கிறாள்
ஒவ்வொரு பெளர்ணமி
சந்திப்பிலும்!

அவளது வீட்டின்
சன்னல் கம்பிகளில்
இருவரின் கை ரேகைகள்!

அவள்
கெண்டைக்கால் கொலுசில்
மஞ்சளும் மஞ்சமும்!

நீ
உச்சி வெயிலில்
தாவணி போர்த்தி
நடக்கும் அழகைக் காணும்வரை
நிலவைப்படைக்கும் எண்ணமில்லை
ஆண்டவனுக்கு!

உள்ளங்கைக்குள்ளேயே
முடிந்துவிடுகிறது
அவளோடு விளையாடும்
நண்டூறுது நரியூறுது
விளையாட்டு!

நீ
இல்லாத வேளையிலும்
ஊர் கிணற்றில்
கொலுசு சத்தம்!

தண்ணிக்குடம்
இடுப்பிலேறியதும்
சிணுங்க ஆரம்பிக்கிறது
அவளின் வளையல்கள்!

நிலாவுக்கு சோறுட்டுகிறாள்
அவளின் அம்மா-அவள்
என்னோடு
சண்டையிட்ட பொழுதுகளில்!

அவள்
பூக்கட்டும் நாற்றில்
விரலின் வாசம்
பின்னர் அதுவே
பூ வாசம்!

அவள்
வீட்டு ஓட்டு நிழலில்
மல்லிகைப்பூ உதிரிகளும்
நகத்துண்டுகளும்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets