சன்னலை அலங்கரிக்கும்
படுகிடை நீள் பட்டையில்
மேலிருந்து கீழாய் கீழிருந்து மேலாய்
விரல் இழுக்கும் ஓசை
ரசித்தபடி சிந்தித்துக்கொண்டிருந்தது
நிறம் பூசிய விரல்கள்
காற்றில் வீசும் அரச இலையின்
சரசரப்புகளும் சிதிலமடைந்த
ஓடு வேய்ந்த கட்டிடமும்
அந்த பெரு நகரத்தில்
கிராமத்தை பசிக்கச்செய்யும்
புள்ளியளவு பசுமை
கூவிக்கலைந்த குயிலின் கானம்
அவளை வழியனுப்புகையில் கசிந்த
பெண் நாயின் கண்ணீரை ஒத்திருந்தது!
படுகிடை நீள் பட்டையில்
மேலிருந்து கீழாய் கீழிருந்து மேலாய்
விரல் இழுக்கும் ஓசை
ரசித்தபடி சிந்தித்துக்கொண்டிருந்தது
நிறம் பூசிய விரல்கள்
காற்றில் வீசும் அரச இலையின்
சரசரப்புகளும் சிதிலமடைந்த
ஓடு வேய்ந்த கட்டிடமும்
அந்த பெரு நகரத்தில்
கிராமத்தை பசிக்கச்செய்யும்
புள்ளியளவு பசுமை
கூவிக்கலைந்த குயிலின் கானம்
அவளை வழியனுப்புகையில் கசிந்த
பெண் நாயின் கண்ணீரை ஒத்திருந்தது!
0 comments
Post a Comment