Pin It

Widgets


சன்னலை அலங்கரிக்கும்
படுகிடை நீள் பட்டையில்
மேலிருந்து கீழாய் கீழிருந்து மேலாய்

விரல் இழுக்கும் ஓசை
ரசித்தபடி சிந்தித்துக்கொண்டிருந்தது
நிறம் பூசிய விரல்கள்

காற்றில் வீசும் அரச இலையின்
சரசரப்புகளும் சிதிலமடைந்த
ஓடு வேய்ந்த கட்டிடமும்

அந்த பெரு நகரத்தில்
கிராமத்தை பசிக்கச்செய்யும்
புள்ளியளவு பசுமை

கூவிக்கலைந்த குயிலின் கானம்
அவளை வழியனுப்புகையில் கசிந்த
பெண் நாயின் கண்ணீரை ஒத்திருந்தது!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets