Pin It

Widgets

வெக்கை பொழியும்
உச்சி வெயில் பொழுதில்
அது கேட்டுக்கொண்டேயிருக்கிறது

என் விழியில் வழியும் கண்ணீர் அதிர
உன் நிராகரிப்பினை
கர்வம் சிந்த வெளிப்படுத்தினாய்

துருவேறிய சன்னல் கம்பிகளில்
தாளமுடியா சிரிப்பில் பதித்த-உன்
கை ரேகைகள் பாதையமைக்கின்றன

அறையதிரும் அந்த எக்காள சிரிப்பானது
முகாமமைக்கிறது
என்னிலிருந்து உன்னை வெளியேற்ற..

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets