Pin It

Widgets


நாணத்தில் கூச்சலிடும்
காந்தக்கண்களை
கடலின் தேகத்தில்
கிடத்தியிருக்கிறாள்
எனை வரவழைத்துக்கொண்டு

மோகத்தில் நெளியும்
அலைகளை காலில் உடுத்தி
சடசடவென ஓடுகிறாள்
தேகம் தொடவிடாது
கெக்கலிக்கிறாள்

பின்னப்படாத கூந்தலில்
எண்ணபடாத காற்றினை
மிச்சமின்றி முகமெங்கும்
முத்தமின்றி படரவிடுகிறாள்
மென்மையாய் மெல்லினமாய்

சத்தமின்றி
விரலிடைகோர்த்து
மணல் பதித்த அழுத்தத்தில்
பிரியமறுத்து ஒட்டிக்கொண்ட
ஈரமணலோடு

எட்டி நின்று அருகில் அழைத்து
தொட்டு நின்று காற்று வாங்க
நாசிஎங்கும் வாசம் கலவா
வாசமொன்று தேகம் திங்க
தூண்டுதென்று சொல்லிவிட

தள்ளிநின்று தோளிலடித்து
காது கேளாது முணுமுணுத்து
மீண்டும் ஒட்டி நின்று
பார்வை திருப்பி நிற்பவளை
கன்னம் நெருங்கி விரல்மீட்டு

ஆப்பிள் கடிக்காமல்
தேகம் பசிக்கிறது என்றேன்
நீ ஆதாம் நான் ஏவாளா என்றாள்?
ஆம் என்றேன்
ஒரு முத்தம் பதிவாகியது
காமனின் ஏட்டில்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets