நாணத்தில் கூச்சலிடும்
காந்தக்கண்களை
கடலின் தேகத்தில்
கிடத்தியிருக்கிறாள்
எனை வரவழைத்துக்கொண்டு
மோகத்தில் நெளியும்
அலைகளை காலில் உடுத்தி
சடசடவென ஓடுகிறாள்
தேகம் தொடவிடாது
கெக்கலிக்கிறாள்
பின்னப்படாத கூந்தலில்
எண்ணபடாத காற்றினை
மிச்சமின்றி முகமெங்கும்
முத்தமின்றி படரவிடுகிறாள்
மென்மையாய் மெல்லினமாய்
சத்தமின்றி
விரலிடைகோர்த்து
மணல் பதித்த அழுத்தத்தில்
பிரியமறுத்து ஒட்டிக்கொண்ட
ஈரமணலோடு
எட்டி நின்று அருகில் அழைத்து
தொட்டு நின்று காற்று வாங்க
நாசிஎங்கும் வாசம் கலவா
வாசமொன்று தேகம் திங்க
தூண்டுதென்று சொல்லிவிட
தள்ளிநின்று தோளிலடித்து
காது கேளாது முணுமுணுத்து
மீண்டும் ஒட்டி நின்று
பார்வை திருப்பி நிற்பவளை
கன்னம் நெருங்கி விரல்மீட்டு
ஆப்பிள் கடிக்காமல்
தேகம் பசிக்கிறது என்றேன்
நீ ஆதாம் நான் ஏவாளா என்றாள்?
ஆம் என்றேன்
ஒரு முத்தம் பதிவாகியது
காமனின் ஏட்டில்!
காந்தக்கண்களை
கடலின் தேகத்தில்
கிடத்தியிருக்கிறாள்
எனை வரவழைத்துக்கொண்டு
மோகத்தில் நெளியும்
அலைகளை காலில் உடுத்தி
சடசடவென ஓடுகிறாள்
தேகம் தொடவிடாது
கெக்கலிக்கிறாள்
பின்னப்படாத கூந்தலில்
எண்ணபடாத காற்றினை
மிச்சமின்றி முகமெங்கும்
முத்தமின்றி படரவிடுகிறாள்
மென்மையாய் மெல்லினமாய்
சத்தமின்றி
விரலிடைகோர்த்து
மணல் பதித்த அழுத்தத்தில்
பிரியமறுத்து ஒட்டிக்கொண்ட
ஈரமணலோடு
எட்டி நின்று அருகில் அழைத்து
தொட்டு நின்று காற்று வாங்க
நாசிஎங்கும் வாசம் கலவா
வாசமொன்று தேகம் திங்க
தூண்டுதென்று சொல்லிவிட
தள்ளிநின்று தோளிலடித்து
காது கேளாது முணுமுணுத்து
மீண்டும் ஒட்டி நின்று
பார்வை திருப்பி நிற்பவளை
கன்னம் நெருங்கி விரல்மீட்டு
ஆப்பிள் கடிக்காமல்
தேகம் பசிக்கிறது என்றேன்
நீ ஆதாம் நான் ஏவாளா என்றாள்?
ஆம் என்றேன்
ஒரு முத்தம் பதிவாகியது
காமனின் ஏட்டில்!
0 comments
Post a Comment