Pin It

Widgets

விழியின் கதிர் வீச்சில் நான்
தொலைந்து விட்டதாய்
அவளிடமே அவளின்
இதழ் நோக்கி
புகார் செய்திருந்தேன்...

பரிசீலனை செய்வதாய்
சொன்னவள் தினம் தினம்
பேசித்தீர்ந்த களைப்பில்
கிண்டலாய் ஏதேனும் சொல்லி
வழியனுப்புவாள்

நடுநிசியில் கண்டதாகவும்
இம்சிப்பதாகவும்
இருக்குமிடம் தெரியாதெனவும்
என்னிடமே என்னைப்பற்றி
மறுபுகார் அளித்திருந்தாள்

அனிச்சையாய் நிகழ்ந்த
இருவருக்குமான இடைவெளியில்
கண்டு கொண்டதாக
விடியற்காலையில்
செய்தி சொல்லியிருந்தாள்

நாளொன்றிற்கு
நூறு முத்தம் கேட்பதாகவும்
நெஞ்சுக்குழிக்கு இடது பக்கம்
ஒளிந்திருப்பதாகவும்
காட்டிக்கொடுத்தாள் காதலை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets