Pin It

Widgets

கோணம்

Monday, March 11, 2013 | 0 comments »

அவ்வளவு நெருக்கமாய்
கடந்து சென்றது
அந்த கொலுசொலி

முந்தானை சொருகலும்
வாயில் மென்னுவதும் எவரையும்
சட்டை செய்யாதது போலிருந்தது

இரயில் பெட்டிகளின்
நீளம்வரை அளந்துமுடிந்த
கண்களும் காதுகளும்

இரயிலில் வந்திறங்கி
கடந்து போகிறவர்களோடு
அந்த ஒலியும் திரும்பி விட்டது

தற்காலிகமாய்
அவளின் பூக்கூடையை
பார்த்துக்கொண்டிருந்த பாட்டி

அவளுக்காக
கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets