Pin It

Widgets

தினம் ஒருமுறையாவது
ஆம்புலன்ஸ் ஓசை கேட்கும்
சாலையையொட்டி எனதறை

இரவின் மங்கிய வெளிச்சத்தில்
ஒளிரும் நீலம் மற்றும் சிவப்பு
அதனூடான அந்த இரைச்சல்

கண்ணாடிப்பேழைக்குள்
சுழலும் ஒளி மற்றும் ஒலி
மொட்டை மாடிக்கு இழுக்கிறது

சுற்றிக்கொண்டேயிருக்கும் ஒளியை
திறந்து விட வேண்டும் போலிருக்கிறது
தலைக்கு மேல் கேட்க வேண்டும் போலிருக்கிறது

என்ன செய்ய செய்யலாம்?
மாடியிலிருந்து குதித்து விடலாம் தான்
கவிதையை யார் முடிப்பது?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets