Pin It

Widgets

இந்த பகல் பொழுது
அத்தனை இனிமையாய் இல்லை
பின்னங்கழுத்து வியர்வை வழிய

தனிமைக்கு தீனி போடுகிறேன்
இறுக மூடிய விழிகளுக்குள்
தூக்கம் நிகழ்ந்து கொண்டிருப்பதாய்

என் அறையின் மின்விசிறியும்
சன்னலில் விழும் வேப்பமர நிழலும்
நம்பிக்கொண்டிருக்கிறது

நீ நடு நிசியில் அழைப்பாயே
எந்தன் பெயர் சொல்லி
சன்னமாய் கேட்கிறது

உன் காதலும் தவிப்பும்
சிரிப்பும் தேடலும் சிணுங்கலும்
மேலும் தேட வைக்கிறது

விரல் கோர்த்து நடக்கவும்
உன்னோடு விளையாடவும்
உன் கூந்தல் வருடவும்

மடி சாய்த்துக்கொள்ளவும்
அருகாமையின் வாசமும்
வேண்டும் வேண்டும் என்கிறது

மூடிய உன் விழிகள் ரசித்தபடி
காதலிக்க வேண்டும்போலிருக்கிறது

என்
அருகில் கொஞ்ச நேரம்
துயில்கிறாயா?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets