Pin It

Widgets

உடைமரக்காடுகளில்
நிலம் ஒதுக்கி

எருக்கம் இலைதனில்
படையல் வைத்து

அதன் கம்புகளுடைத்து
பந்தல் செய்து

இலைகள் மடித்துடைத்து
பால்துளி ஊற்றி

அம்மா பீடிதட்டில்
நூல் திருடி

எருக்கம்பூவில்
மாலை கட்டி

உன்னை மணமுடிக்கையில்
நமக்கு நாமே குழந்தைகளாய்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets