Pin It

Widgets

நேரம் கடந்த இரவிலும்
இன்னும் யாருக்காகவோ
காத்திருக்கிறாள் அவள்

தொய்விழந்த விலைமாதுவோ
ஊடல் கலைக்க கணவனோ
காதலிக்கான கூடலுக்கோ

யாருக்காகவோ
காத்துக்கொண்டிருக்கும்
இரயிலடி கிழவியின்

பூக்கூடையில் நரையும்,
தெளித்து வைத்த
உலையிலேறாத நீரும்...

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets