Pin It

Widgets

ஆமென்...

Monday, June 10, 2013 | 0 comments »

முடிந்து விட்டதாக உணரப்பட்ட
ஊடல் தெருவின்
இடப்பக்கத்தில் இரவு பகலென
எரிந்து கொண்டிருக்கிறது
விளக்கு ஒன்று...

விழிகளால் மட்டுமே
சாத்தியமான மனக்கண்ணின்
பார்வை சீழ்வடிந்தபடி
மங்கிய உருவமொன்றை
முன்னிறுத்துகிறது

பதற்றத்தில்
விரல்நகம் கடிக்கும்
உந்தன் பழக்கம்
அந்த மங்கிய உருவத்தோடு
ஒத்துப்போகிறது

சற்று இறுகப்பற்றியதில்
செவிக்கு இடையூறான
துடிப்பு நின்றிருப்பது
ஆறுதலாய் இருக்கிறது
ஆமென்...

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets