Pin It

Widgets

அறுந்த பாசியின்
உலர்ந்த முத்துகளை
முந்தானையில் ஏந்தி

மனதில் அலறல்களை
குமிழ்களாக்குகிறாள்
வீட்டுக்கிணற்றில்

நிலவின் தவம் கலைத்து
பிம்பம் உடைக்கும்
நீர் அலைகளோடு

வந்தடைய துடிக்கும்
விழியுதிரிகள்
உட்சுவற்றில் மோதி

ஈரம் குடிக்க
கிணற்றை சுற்றி
காதலன் வாசமும்

ஒழுகும் நாசி துடைப்பில்
சேலை களைந்த
கணவனின் தாகமும்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets