Pin It

Widgets

தோல் சீவினால் தான்
உண்ணுவாளென அடம்பிடிக்கும்
குழந்தைக்கு தாய் அவள்

இரண்டாய் பிளக்கப்பட்ட
ஆப்பிளில் படிந்த கத்திக்கறையால்
வேண்டினாள் மற்றுமொரு ஆப்பிள்

தொண்டைக்குழியில்
சிக்கிவிடக்கூடாதென தூர எரிந்த
விதைகளுக்கு நீருற்றும் மகளைப்போல

பனிக்குடம் உடையும் நாளுக்காக
காத்திருக்கும் தாய் அவள்
குழந்தை போன்றவள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets