Pin It

Widgets

படர்ந்த கண்ணில் விழுந்து
அகன்ற நெற்றியில் தவழ்ந்து
கருங்கூந்தலில் நீந்தி

காதுமடல் பற்றி
கூர்நாசி உராய்ந்து
உதட்டில் தேனேடுத்து

திமிரிய தோளில் சாய்ந்து
கழுத்து நரம்பில் நழுவி
நெஞ்சுக்குழியில் மூழ்கி

கொங்கைகள் பற்றி எழுந்து
இடையினில் மூச்சு வாங்கி
மடிச்சூட்டில் குளிர் காய்ந்து

நித்தமும்
முத்தெடுத்திட வேண்டும்
உன்னுடனான உயிர் கூடலில்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets