மேற் சொன்ன எதுவும்
உன்னை
சமாதானப் படுத்திவிடாதென தெரியும்
நீ என்பதன் பொருளடக்கம்
எந்த இரவிலும் எந்த பகலிலும்
உணர்ந்துவிடமுடியா ஒன்று
இருந்தும் அறிந்து வைத்தவைகள்
சொல்லி வைத்தவைகள் சரியென
புலனாகிக்கொண்டுதான் வருகிறது
இருப்பினும்
நத்தையோட்டில் விழுந்து நழுவும்
ஒற்றை மழைத்துளி போல
காக்கை கூட்டில் தவறிய
காய்ந்த முள்ளொடித்து
கிழித்துக்கொண்ட உதட்டுக் குருதியில்
உன் பெயரெழுதிப் பார்ப்பதில்
கொஞ்சம் ஆறுதலாய் தான் இருக்கிறது
துவங்கப்படாத கவிதையொன்றிற்கு!
உன்னை
சமாதானப் படுத்திவிடாதென தெரியும்
நீ என்பதன் பொருளடக்கம்
எந்த இரவிலும் எந்த பகலிலும்
உணர்ந்துவிடமுடியா ஒன்று
இருந்தும் அறிந்து வைத்தவைகள்
சொல்லி வைத்தவைகள் சரியென
புலனாகிக்கொண்டுதான் வருகிறது
இருப்பினும்
நத்தையோட்டில் விழுந்து நழுவும்
ஒற்றை மழைத்துளி போல
காக்கை கூட்டில் தவறிய
காய்ந்த முள்ளொடித்து
கிழித்துக்கொண்ட உதட்டுக் குருதியில்
உன் பெயரெழுதிப் பார்ப்பதில்
கொஞ்சம் ஆறுதலாய் தான் இருக்கிறது
துவங்கப்படாத கவிதையொன்றிற்கு!
0 comments
Post a Comment