Pin It

Widgets

மேற் சொன்ன எதுவும்
உன்னை
சமாதானப் படுத்திவிடாதென தெரியும்

நீ என்பதன் பொருளடக்கம்
எந்த இரவிலும் எந்த பகலிலும்
உணர்ந்துவிடமுடியா ஒன்று

இருந்தும் அறிந்து வைத்தவைகள்
சொல்லி வைத்தவைகள் சரியென
புலனாகிக்கொண்டுதான் வருகிறது

இருப்பினும்
நத்தையோட்டில் விழுந்து நழுவும்
ஒற்றை மழைத்துளி போல

காக்கை கூட்டில் தவறிய
காய்ந்த முள்ளொடித்து
கிழித்துக்கொண்ட உதட்டுக் குருதியில்

உன் பெயரெழுதிப் பார்ப்பதில்
கொஞ்சம் ஆறுதலாய் தான் இருக்கிறது
துவங்கப்படாத கவிதையொன்றிற்கு!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets