Pin It

Widgets

மடி வாய்க்காத
நெருஞ்சிமுள் படுக்கையில்
எதனைக்கொண்டு தேற்றுவது

தனிமையென்று ஒன்று
இல்லையென தீர்மானித்த பொழுதில்
சுமத்தலின் எடை அறிந்திருக்கவில்லை

தடயங்களற்று
வாங்கிக்கொள்ளும் காயம்
உடலில் தழும்புகளிட தூண்டுகிறது

யாருக்கேனும் பதில்சொல்ல நேரும்
இந்த வாழ்தல் காலங்களில்
இறத்தல் குறித்த உந்துதல்

எல்லா சூழலிலும் தோற்றுவிட
தற்கொலைக்கு துணிந்து வெல்பவன்
எத்தனை பாக்கியசாலி...

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets