மடி வாய்க்காத
நெருஞ்சிமுள் படுக்கையில்
எதனைக்கொண்டு தேற்றுவது
தனிமையென்று ஒன்று
இல்லையென தீர்மானித்த பொழுதில்
சுமத்தலின் எடை அறிந்திருக்கவில்லை
தடயங்களற்று
வாங்கிக்கொள்ளும் காயம்
உடலில் தழும்புகளிட தூண்டுகிறது
யாருக்கேனும் பதில்சொல்ல நேரும்
இந்த வாழ்தல் காலங்களில்
இறத்தல் குறித்த உந்துதல்
எல்லா சூழலிலும் தோற்றுவிட
தற்கொலைக்கு துணிந்து வெல்பவன்
எத்தனை பாக்கியசாலி...
நெருஞ்சிமுள் படுக்கையில்
எதனைக்கொண்டு தேற்றுவது
தனிமையென்று ஒன்று
இல்லையென தீர்மானித்த பொழுதில்
சுமத்தலின் எடை அறிந்திருக்கவில்லை
தடயங்களற்று
வாங்கிக்கொள்ளும் காயம்
உடலில் தழும்புகளிட தூண்டுகிறது
யாருக்கேனும் பதில்சொல்ல நேரும்
இந்த வாழ்தல் காலங்களில்
இறத்தல் குறித்த உந்துதல்
எல்லா சூழலிலும் தோற்றுவிட
தற்கொலைக்கு துணிந்து வெல்பவன்
எத்தனை பாக்கியசாலி...
0 comments
Post a Comment