Pin It

Widgets

மரணங்கள் குறித்து நீ
விவாதிக்கொண்டிருக்கிறாய்
தொடர்ச்சியாக

முடிந்த வரையில்
சுவரொட்டியில் காண்பவைகளை
சிலாகித்துவிடுகிறேன்

கண்ணீர் அஞ்சலி
அகால மரணம்

இரண்டின் கூறுகளையும்
இரவுகளில் நிறுத்தி
அகால மரணத்திற்கு அடிபோடுகிறாய்

தற்காலிகமாய் உன்னைவிட்டு
தள்ளிப்போதலே நலமெனில்
காத்திருத்தல் அத்தனை அமைதியில்லை

ஏனெனில்
நீ என்பது நானின்றி
பிரிதொருவர் இல்லை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets