Pin It

Widgets

தேற்றுவது குறித்தான கவலைகள்
பறிக்கப்படாத கள்ளிப்பூக்கள்போல
உதிர்ந்து கொண்டிருக்கின்றன

யாசகம் வேண்டுபவனின்
கை சுருக்கங்களை ஒத்திருக்கிறது
உன் சம்பிரதாய புன்னகை

முன்னமே தெரிந்திருக்கிறது
சந்திப்பு நிகழ்ந்தே தீருமென்று
தீர்க்கமாய் புன்னகைத்துவிட்டாய்

கை குலுக்கல் நிகழா வண்ணம்
பார்த்துக்கொண்ட உனதிந்த லாவகம்
ஆறுதலாயிருக்கிறது எனக்கு

இருந்தும் கணவனில்லாதவளென எழும்
ஏளன பேச்சுகள் புதிதாய் பூத்திருக்கிறது
எந்நிலையிலும் வாழும் கள்ளிச்செடி மனதில்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets