Pin It

Widgets

ஒரு போதும் கேட்பதில்லை
ஒப்பாரிகள்
சம்பந்தப்பட்டவனுக்கு

குரல் கேட்க தோணிச்சி என்றும்
பார்க்கனும் போல இருக்கு என்றம்
அழைப்பினை பெற்றவரா நீங்கள்?

தென்னம்பூக்கள் உதிரும் காலத்தில்
அணில்களின் பரவசம்போல
சுதந்திரமாய் சந்தோசமாய் இருங்கள்

உயிராய் இருந்தாலும் சரி
பொருளாய் இருந்தாலும் சரி
தோன்றியதெனில் முத்தமிட்டு வையுங்கள்

அன்பின் கோரப்பிடிக்கான வெளிப்பாடுதான்
உங்களுக்கான ஒப்பாரியை
நீங்களே நிகழ்த்திக்கொள்ளுங்கள்

ஏனெனில்
நிரந்தரமல்ல எதுவும்
எப்போதும்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets