நீரிரைச்சல் கேட்டு எத்தனை இரவுகள்
எத்தனை பகல் கடந்து விட்டது
எங்கள் ஊர் பாலத்திற்கும் எங்களுக்கும்
சாக்கடையென அறிந்தும்
அது ஓடையாகியிருக்கும்
மழைக்கால கப்பல் பயணங்களில்
பொத்தென விழும் ஓட்டு வீட்டு மழை
கீற்றில் சரசரக்கும் கூரை வேய்ந்த மழை
மரங்களில் பொசபொசக்கும் மழை
சொளவினை குடையாக்கி
அடுப்பு மூட ஓடும் அம்மா
நஞ்சை மூழ்கி விடாக்கூடாதென
வரப்புவெட்டிவிட ஓடும் அப்பா
கோவில் வராண்டாவில்
கலைத்து ஆடும் சீட்டுக்கட்டுகள்
தாத்தாவின் சுருட்டு வாசம்
தன் பையனை பார்த்திங்களாவென
மழைக்காலங்களில் தேடியலையும்
ஏதோ ஒரு அக்காவின் குரல்
தெருவெங்கும் கைவிரித்து
அங்குமிங்குமாய் சிறகடித்து அலையும்
வாண்டுகளும் சிறுவர்களும்
எதையும் காணவிடாது
சுட்டெறிக்கும் இந்த சூரியனில்
கண் விழித்தாலென எரிந்தாலென்ன?
எத்தனை பகல் கடந்து விட்டது
எங்கள் ஊர் பாலத்திற்கும் எங்களுக்கும்
சாக்கடையென அறிந்தும்
அது ஓடையாகியிருக்கும்
மழைக்கால கப்பல் பயணங்களில்
பொத்தென விழும் ஓட்டு வீட்டு மழை
கீற்றில் சரசரக்கும் கூரை வேய்ந்த மழை
மரங்களில் பொசபொசக்கும் மழை
சொளவினை குடையாக்கி
அடுப்பு மூட ஓடும் அம்மா
நஞ்சை மூழ்கி விடாக்கூடாதென
வரப்புவெட்டிவிட ஓடும் அப்பா
கோவில் வராண்டாவில்
கலைத்து ஆடும் சீட்டுக்கட்டுகள்
தாத்தாவின் சுருட்டு வாசம்
தன் பையனை பார்த்திங்களாவென
மழைக்காலங்களில் தேடியலையும்
ஏதோ ஒரு அக்காவின் குரல்
தெருவெங்கும் கைவிரித்து
அங்குமிங்குமாய் சிறகடித்து அலையும்
வாண்டுகளும் சிறுவர்களும்
எதையும் காணவிடாது
சுட்டெறிக்கும் இந்த சூரியனில்
கண் விழித்தாலென எரிந்தாலென்ன?
0 comments
Post a Comment