பாவடையெல்லாம்
இரத்தம் படிந்து விட்டதாகவும்
கொய்யா மூட்டில்
அம்மா வைத்திருப்பதாகவும்
பள்ளிக்கும் வீட்டிற்குமான இடைவெளியில்
வயது வந்ததை சொன்னவள்
வெற்று தீப்பெட்டியில்
மண் குழைத்து
செங்கல் செய்து வீடுகட்டி
அடுக்களை செய்து
சமையல் செய்து
கடவுள் செய்து
உச்சி வெயில் பாராது
உடைமர பூக்கள் தூவி
குடித்தனம் நடத்தியவள்
முத்து வச்ச கொலுசென
கணுக்கால்வரை உயர்த்தி முதலாய்
காமம் கொளுத்தியவள்
ஒவ்வொரு சாணெடுத்து சீராய் மடித்து
கொசுவம் பிடித்து பாட்டி இடையில்
சொருகியது சொல்லி நாணியவள்
இருவருமாய் விரும்பி
நிலவெனும் பாயில்
மதிலோரம் தாவணி விரித்தவள்
மெழுகு உருகும் இரவெல்லாம்
தவறாது வந்து விடுகிறாள்
புணர்ந்த அன்று வழிந்த கண்ணீரோடு
குளத்து நீரில் மூழ்கிய
முள் கிழித்து கொடிசுற்றி
தக்கையாய் மிதந்தவள்
பப்பாளி குழல் ஒடித்து
கோவில் மெழுகு உருக்கி
மெழுகுவர்த்தி செய்தவள்!
இரத்தம் படிந்து விட்டதாகவும்
கொய்யா மூட்டில்
அம்மா வைத்திருப்பதாகவும்
பள்ளிக்கும் வீட்டிற்குமான இடைவெளியில்
வயது வந்ததை சொன்னவள்
வெற்று தீப்பெட்டியில்
மண் குழைத்து
செங்கல் செய்து வீடுகட்டி
அடுக்களை செய்து
சமையல் செய்து
கடவுள் செய்து
உச்சி வெயில் பாராது
உடைமர பூக்கள் தூவி
குடித்தனம் நடத்தியவள்
முத்து வச்ச கொலுசென
கணுக்கால்வரை உயர்த்தி முதலாய்
காமம் கொளுத்தியவள்
ஒவ்வொரு சாணெடுத்து சீராய் மடித்து
கொசுவம் பிடித்து பாட்டி இடையில்
சொருகியது சொல்லி நாணியவள்
இருவருமாய் விரும்பி
நிலவெனும் பாயில்
மதிலோரம் தாவணி விரித்தவள்
மெழுகு உருகும் இரவெல்லாம்
தவறாது வந்து விடுகிறாள்
புணர்ந்த அன்று வழிந்த கண்ணீரோடு
குளத்து நீரில் மூழ்கிய
முள் கிழித்து கொடிசுற்றி
தக்கையாய் மிதந்தவள்
பப்பாளி குழல் ஒடித்து
கோவில் மெழுகு உருக்கி
மெழுகுவர்த்தி செய்தவள்!
0 comments
Post a Comment