Pin It

Widgets

பொழுதுகள் அறியா கூடலில்
மயங்கிச்சரியும் விழியில்
கானல் வறட்சி

இளைப்பாற நிழலின்றி
வெடித்துக்கிடக்கும்
எச்சில் பாயாத உதடு

பனியிரவில் நிலம் உழும்
உந்தன் விரலற்று
பருக்களான தேகம்

செவியில்லா சுவர்களும்
எதிர் பார்வையில்லா விட்டமும்
எனை சூழ்ந்திருக்க

இருக்கையின் சாய்வில்
சரிய மறுக்கிறது-உன்
ரேகைகள் பதிந்த முதுகு!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets