மூங்கில் காட்டில்
சருகுகளின் அதிர்வில்
ஓடையின் சலசலப்பில்
நீ
நான்
நிலவு
மற்றும்
கானாதொரு கனவின்
நிகழ்வு!
மணல் மறைந்த
புல் தரையில்
பனியிரங்கும்
சாமத்தில்
நீ
நான்
நிலவு
மற்றும்
பருகப்படாத
ஒரு கோப்பை
மூச்சுக்காற்று!
சன்னல் சாரலில்
அணையவிடா
மெழுகின் ஒளியில்
நீ
நான்
மற்றும்
பொழியாத வியர்வை
வாழைமடல்
நிழலொதுங்க
பூக்களின்
அழகு ரசித்து
நீ
நான்
நிலவு
மற்றும்
முதுகிலொட்டாத
மண் துகள்கள்
கேந்திப்பூக்களின்
நீரோட்டப்பாதையில்
தென்னையோலை விரிப்பில்
நீ
நான்
நிலவு
மற்றும்
மலராத மொட்டு
நெடுக வளர்ந்த
பாக்குத் தோப்பில்
தரையோட்டி
கிளைவிரித்த
மாமரத்தினடியில்
நீ
நான்
நிலவு
மற்றும்
கைக்கெட்டும் தூரத்தில்
தேன் கூடு
வரப்பிலோடும்
நீரில் உடல் சாய்த்து
மின்மினிகளோடு
நீ
நான்
நிலா
மற்றும்
தாகம்!
மல்லிக்கொடிகள்
கிளைவிரித்த
செம்மன் விரிப்பில்
நீ
நான்
நிலா
மற்றும்
நுகராதொரு வாசனை!
ஆயில் மோட்டரின்
புகை வாசனையும்
கீற்று கொட்டகையின்
இடுக்குகளில் விழும்
நிலவொளியோடு
நீ
நான்
மற்றும்
ஈரம் வாடும் சேலை
வீசியடிக்கும் மழையில்
ஒற்றைப்பனைமர ஒதுக்கில்
நீ
நான்
மின்னல்
மற்றும்
வகிட்டு குங்குமம் வடிந்த
கூர் மூக்கு!
சருகுகளின் அதிர்வில்
ஓடையின் சலசலப்பில்
நீ
நான்
நிலவு
மற்றும்
கானாதொரு கனவின்
நிகழ்வு!
மணல் மறைந்த
புல் தரையில்
பனியிரங்கும்
சாமத்தில்
நீ
நான்
நிலவு
மற்றும்
பருகப்படாத
ஒரு கோப்பை
மூச்சுக்காற்று!
சன்னல் சாரலில்
அணையவிடா
மெழுகின் ஒளியில்
நீ
நான்
மற்றும்
பொழியாத வியர்வை
வாழைமடல்
நிழலொதுங்க
பூக்களின்
அழகு ரசித்து
நீ
நான்
நிலவு
மற்றும்
முதுகிலொட்டாத
மண் துகள்கள்
கேந்திப்பூக்களின்
நீரோட்டப்பாதையில்
தென்னையோலை விரிப்பில்
நீ
நான்
நிலவு
மற்றும்
மலராத மொட்டு
நெடுக வளர்ந்த
பாக்குத் தோப்பில்
தரையோட்டி
கிளைவிரித்த
மாமரத்தினடியில்
நீ
நான்
நிலவு
மற்றும்
கைக்கெட்டும் தூரத்தில்
தேன் கூடு
வரப்பிலோடும்
நீரில் உடல் சாய்த்து
மின்மினிகளோடு
நீ
நான்
நிலா
மற்றும்
தாகம்!
மல்லிக்கொடிகள்
கிளைவிரித்த
செம்மன் விரிப்பில்
நீ
நான்
நிலா
மற்றும்
நுகராதொரு வாசனை!
ஆயில் மோட்டரின்
புகை வாசனையும்
கீற்று கொட்டகையின்
இடுக்குகளில் விழும்
நிலவொளியோடு
நீ
நான்
மற்றும்
ஈரம் வாடும் சேலை
வீசியடிக்கும் மழையில்
ஒற்றைப்பனைமர ஒதுக்கில்
நீ
நான்
மின்னல்
மற்றும்
வகிட்டு குங்குமம் வடிந்த
கூர் மூக்கு!
0 comments
Post a Comment