Pin It

Widgets

தொடர்வண்டியின்
பிரத்யேக தண்டவாளம் தவிர்த்து
ஒதுங்குகிறாள் அவள்

இரயில் சுமை தாங்கும்
படுகிடை கான்கிரீட் கல்லில்
காலகற்றி அமருகிறாள்

விளக்கொளியும், எஞ்சின் அதிர்வும்
உணரும் வேளையில் கைப்பிடித்து
எழுவோ துணையோ இல்லாது போக

கடைசியாய் உதிரம் நிறுத்தியவனின்
முகமெதுவென அறியாது
அழ நேர்ந்திட

கால் தடுமாறி இடுப்பெழும்புகள்
இயல்பிழக்க பற்கள் இறுகக் கடித்து
தாயின்றி சேய் பிரசவிக்கிறாள்

நிறைமாத கற்பிணி ஒருத்தி!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets