Pin It

Widgets

காதல் அணை

Monday, June 10, 2013 | 0 comments »

எங்கும் நதி போல
பாயும் நினைவு நீரை
அது கட்டியாடும்
சலசலப்பினை
மனதின் சஞ்சலங்களை

இரவின் கூட்டில்
ஒரு கம்பியில் கோர்த்து
நீ பருக வேண்டி
காத்திருக்கிறேன்
பின்னிரவு வரை

மனப்பற்களில்
சிக்கிக்கொண்டு
துள்ளலெடுக்கும்
காதலையும் காமத்தையும்
அதன் சிதறல்களையும்

எச்சில் சூட்டோடு
இதழ் கவ்விடாத
முத்தம் போல
ஒத்தடமிட்டு ஒத்தடமிட்டு
பற்றிக்கொள்வது கண்டு

நீ சிணுங்கும் சிணுங்களில்
தூண்டில், வலையாகிப்போக
மொத்தமாய் கவிழும்
நீயும்
நானும்

கரைசேரவோ கை சேரவோ
தத்தளிக்கும் விடியலில்
யாருக்கு யார்
யாருடையதை யார்
மூச்செடுத்து கரை சேர்வதெனும்

போராட்டத்தில்
கிழ் வானச்சிவப்பில்
மயங்கிச்சரியும் கூந்தலில்
தலையணையடியில் நம்மை
தேக்கி வைப்போம் வா!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets